இதுவா அதுவா ஈரமிக்கது எந்த சொல்?
இப்படியா அப்படியா எப்படிச் சிறப்பாகச் சொல்வது இதை?
கதகதப்பாய் உணரப்படும் இது என்ன ?
அதிகம் உணர்வது நீயா நானா?
பெய்வதென்ன மழை தானா?
அதிகம் நனைந்தது இருவரில் யார்?
வெகுவாய் சுடுவது உன்னதா- என் கண்ணீரா?
பிரிவென்று வந்தால் எப்படி எதிர்கொள்வது?
அப்படியெல்லாம் வருமா என்ன?
என்றெல்லாம் யோசிப்பதற்கு அவகாசமில்லாது இருந்திருக்கலாம்
ஒரு முத்தமாவது இட்டுத் தொலைத்திருக்கலாம் தானே?
இப்போது இப்படியல்லாமல்..
உறக்கத்தில் கேவி நடுங்கும் உதடுகளை
கனவில் மினுங்கும் அதன் நினைவுகளையாவது
தடவி ஆற்றியிருக்கலாம்!
..ஷஹி..