
கறுந்துயரலைகள் தோற்றும்..
இரவெனும் பேராழி,
பகலொளியெனும்,
மாயத்திரை மறைக்கும் வலியெல்லாம்,
வலித்துச் சேர்க்கும் வெளியெங்கும்!
திண்மைப் படகுகள்..
கதிரொளியில் மட்டுமே பயணிக்கும்!
ராவெனும் பேரலை ,
அமிழ்த்திடும் திடமெல்லாம் ஆழ!
துயரின் தொலைவுக்கு,
நீளும் இரவின் தூரம்.
மார்பின் கனமெல்லாம்..
பெருமூச்செறிவுகளில் தெரிக்க,
புலரும் பிரிதொரு பொழுது,
எறிந்ததெல்லாம்,
மீண்டும் ஒளிக்க!