
விடுதிகளில் உண்டு முடித்ததும்
பரிமாறியவருக்கும்...
மகிழுந்துகளில் பயணித்து இறங்குகையில்
ஓட்டுநருக்கும்....
நன்றி சொல்லவும்,
சமையற்காரம்மாளை மாமி என்றழைக்கவும்...
சொல்லிப்.. பழக்கியுள்ளாள் உன் தாய்!
வந்தனம் அவளுக்கு!
"ஏய் " என்பதல்லாமல் வேறெப்படியும்..
நான் அழைகப்படலாமாவென கேட்க மட்டும்
ஏனோ நீயும் தானில்லை ...
அவளும் தான் மறந்து போனாள்!