Search This Blog

Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Sunday, July 18, 2010

காலம்..


குழந்தையாய் இருந்த போது,
ஓயாமல் கேட்பேன் கேள்விகள்...
விபரமாய் பதில் வரும் ..அப்பாவிடமிருந்து.
இப்போது அவர் உறங்கும் நேரம் தவிர,
அருகில் செல்வதில்லை நான்!
நச்சரிப்புகளுக்கு ஆளாக நேரமில்லை எனக்கு!
நாளையைப் பற்றிய கவலையும் எனக்கில்லை.
வசதியான முதியோர் இல்லத்தில்...
எனக்கான , முன்பதிவுகள் ..
முடித்துவிட்டேன்!

Thursday, July 15, 2010

குட்டி மனுஷி...


கால் முளைத்த புஷ்பம்....
புன் சிரிக்கும் தென்றல்....
அணைத்து முகரும் போது,
உயிரின் வாசம் வீசும்!
நெஞ்சை உதைக்கும் கால்கள்...
நின்ற துடிப்பைத் தூண்டும்!
கன்னம் தடவக் கைகள்...
தவங்கள் செய்ய வேண்டும்!
சின்னச் சிரிப்பைப் பார்த்தால்..
மனக் காயம் ஆறிப் போகும்!
பட்டுக் கேசம் தடவி..
மயிலிறகு தோற்கும்!
இறுகப் பற்றும் விரல்கள்...
முத்த மழை வெல்லும்!
நீராட்டிய தண்ணீர்...அது..
ஆசி வழங்கும் பன்னீர்!
இதழ்கள் சிந்தும் முத்தம்...
ஆயுள் வளர்க்கும் தீர்த்தம்!
உன்னை அணைத்த கரங்கள்...
வாளேந்த மறுக்கும்!
மழலைப் பேச்சு கேட்டால்..
தோட்டாக்களும் நமுக்கும்...!
dedicated to jenithaa's baby..Arshaa

Wednesday, July 7, 2010

என் கண்ணாடியும் ஒரு பூனைக்குட்டியும்!


பூனைக்குட்டி வளர்த்திருக்கிறாயா?பூனைக்குட்டி?..
நான் வளர்த்தேன்...
நானே அப்போது குட்டி தான்!
மிகுந்த பிரியம் ..
என் மீது அவற்றுக்கும்..
அவை மீது எனக்கும்!
மனிதப் பாசம் என்றாலே மோசமும் தானே?
அன்பை மட்டுமல்லாது,
ஆத்திரத்தையும் காட்டுவேன் அவற்றின் மீதே!
எல்லாம் மறந்து என்னிடமே வரும் ,
அவற்றைப் பார்க்கையில் ...
மனம் மிக வலிக்கும்!
ஆச்சர்யம் பார்..
சில நாட்களாய்..
கண்ணாடியில் பார்க்கையில்,
என் முகமே தெரிவதில்லை!
நான் பார்ப்பதெல்லாம்..
ஒரு...
குட்டிப் பூனையைத் தான்!!!
Related Posts with Thumbnails