Search This Blog

Monday, August 23, 2010

கனவு இல்லம்!


வாசலில் வேம்பு..
கொல்லையில் துளசி..
தொட்டிகளில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்கள்..
தரையெங்கும் பளிங்கு..
முற்றத்தில் ஊஞ்சள்..
நன்றாய்த்தான் இருக்கிறது வீடு!

ஆனாலும்..

கொசுக்கடியோடும், தண்ணீர்ப் பஞ்சத்தோடும்,
தடுமாறிய பழைய வீடு வருதென் கனவுகளில் அடிக்கடி!

கனவுக் காரணம்...

அப்போது நான் கவலையில்லா பள்ளி மாணவி என்பதா?
இல்லை....

பள்ளியில் இருந்தெனை
உன் மிதிவண்டியில்
கொண்டு விடும் தொலைவில் இருந்த வீடென்பதா?

4 comments:

Related Posts with Thumbnails