Search This Blog

Wednesday, March 2, 2011

சொட்டுச் சொட்டாய் வர்ணம்..



ஒன்று,

இரண்டு,

மூன்று...

வண்ணங்கள்

எண்ணிக் கொண்டிருந்தேன்

பச்சை,

மஞ்சள்,

ஊதாவென.

உயர்ந்து படந்திருந்த

மலைக்காட்டின் செம்மலராம்..

மலைத்தென்றலும் கதிரொளியும்

பெருமழையுமாய்க் கனிந்து சிவந்து.

மலைப் பார்க்கவென வந்து,

உன்

நந்தவனத்திலும் உண்டு

வர்ணங்கள்

என்று,

ஒன்றிரண்டு வேர்களை,

விட்டு விட்டும் பிடுங்கி,

நட்டு வைத்துப் பார்த்தாய்

எனை,

உன் குடியிருப்பின் தீர்மானமான

நீள அகலச் சட்டத்துள்.

உன் முகம் பார்த்து,

மலர்ந்து,

கூம்பி,

இந்த இளங்காலையில்

நீ

கருணையுடன் ஊற்றும்

நீர்த் துளிகளை

எண்ணிக் கொண்டிருக்கிறேன்...

ஒன்று ,

இரண்டு....

..ஷஹி..

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails