Search This Blog

Monday, March 7, 2011

அம்மா உனக்கு..


ஊரெல்லாம் புகழ்ந்தது ..
தங்க மனசுக்காரியென்று.


உற்றாருக்கு நானென்றால் ..
உறவாட வெகு விருப்பம்.

வாசலில் தேடி வந்து,
உரிமையாய் உணவு கேட்பர்..
வீதியில் சுற்றும், விதியில்லாதவர்.

தோழியருக்கும் நான் தான்
துயரத்தில் உற்ற துணை.

மாமியாரே கூட ..
'மகள் போல 'என்று விட்டார்!

அவருக்கு நான் தான்,
அன்பின் திருவுரு,

"உலகில் சிறந்த அம்மா "
என்பர் என் பிள்ளைகளின் தோழர்களும்!

" நிறைந்தது"..
என்று...
நினைக்க ஆசை தான்...

அவ்வப்போது அவசரத்திலும்,
எப்போதாவது ஆத்திரத்திலும்,
நான் அலட்சியமாய்ப் பேசி அழ வைக்கும்..
அன்னையின்..
கண்ணீர் பட்டு, கறையான என் நெஞ்சை..

...ஷஹி..

3 comments:

Related Posts with Thumbnails