Search This Blog

Tuesday, August 23, 2011

அழகழகாய் அழகு..

தவறும் நொடி!

புகைப்படமெடுக்கும் புதிய கைபேசி,
புன்சிரிக்கும் மழலை,
பதிந்து கொள்ளும் துடிப்பில்,

கோணங்களின்தேர்வு.

தவற விட்டது..

அழகின் சிரிப்பில்
நொடியின் லயிப்பு!

பாராட்டு!


திமிங்கலத்தின் படமொன்று பார்த்து..

"திமிங்கலம்"என்று விட்டதாம்...
வீடே "சபாஷ்" சொல்லி
குழந்தைக்குக்
கை தட்டியது..

சிந்தாமல் உணவருந்தி,
அழாமல் பள்ளி சென்று,
பொத்தான்கள் வரிசையாய்ப் பொறுத்தி,
காலுறை சரியாய் அணிந்து..
சபாஷ்களும் கைதட்டல்களும்
சேமித்து வந்தது குழந்தை .

அலுவலகக் காலையின்..
அவசர நொடியொன்றில்-
அப்பாவின் கண்ணாடி எடுத்து,
அழகாய்ப் பொறுத்திப் பார்த்தது...

பார்வையாளர்களுக்கெல்லாம்
பலப்பல வேலை இருக்க ...
தானே "சபாஷ்" சொல்லி,
தன் கைகள் தனக்காய் தட்டியது..

ரசித்துக் கொண்டே இருந்து,
தன் படைப்பில் தானே மகிழ்ந்து,
"சபாஷ்கள்" பலவும் சொல்லி,

கைகள் தட்டிக் கொண்டார் கடவுளும்!

..ஷஹி..

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails