Search This Blog

Wednesday, January 26, 2011

மறக்காமல் வா..


ஓர் சுயநலத்தருணத்தில்,

சிதறிப் போனது..

தேவதைகள் ஆசிர்வதித்துத் தந்த

நம் காதல் மாலை..

நடவையில் இருக்கும்

சபிக்கப்பட்ட பொழுதுகளில்,

"உனக்கு முன் மரணம் வந்தால்

நீ வந்து சேரும் வரை..

மூடாது என் விழிகள் "

என்று,

நாம் கதைத்த காதல் நொடிகள்

கைகொட்டிப் பரிகசிக்கின்றன.

இதோ....

இமை மூடா,

உயிர்ச் சவமாய் ,

உலவிக்கொண்டிருக்கின்றேன்.

காதல் வளையம் தகித்து,

கருகிப்போன என் தேகத்துக்கு,

மலர்வளையம் சமர்ப்பிக்கவாவது...

மறக்காமல் வா. ..

...ஷஹி...

6 comments:

  1. Nice one..

    மறக்காமல் நானும் பின்னூட்டம் இட்டு விட்டேன் :)

    ReplyDelete
  2. @இளங்கோ ரொம்ப நன்றி இளங்கோ..

    ReplyDelete
  3. @வெறும்பய..நன்றி நண்பா..

    ReplyDelete
  4. "உனக்கு முன் மரணம் வந்தால்

    நீ வந்து சேரும் வரை..

    மூடாது என் விழிகள் "
    ///

    nice one madam,really too good..

    ReplyDelete
  5. மிக்க நன்றி திரு.சிவா..

    ReplyDelete

Related Posts with Thumbnails