( pic crtsy .. www.wallsave.com )
பெறுநர் நீ என்ற அடையாளத்துடனான
ஒரு கடிதத்தின் வருகைக்காக
யுகங்களாகக் காத்து கொண்டிருக்கிறாய்
நீ சமைத்த உணவின்
ருசியேறின விரல்களினால்,
உன் அழகைப் பற்றின வர்ணனைகள் கொண்டதாய் ,
உலகிலேயே சிறந்த
உன் புன்னகையின் வெளிச்சக் குறிப்புடன்
நீ வளர்க்கும் மலர்கள் தாம்
எப்போதும் பிரகாசிக்கின்றன என்றும்
உன்னிலிருந்து வீசும் நறுமணம்
காற்றில் ஏறி அலைவதாகவும்
நல்லுணர்வுகள் தாங்கியதாகவும்
உன் பதில் கடிதம் கொணரவிருக்கும்
ஏக்கத்தவிப்பின் அங்கலாய்ப்புகள் தூவினதாகவும்
அது இருக்கலாம்
அல்லது
இவற்றில் எதையுமே அது பேசாமலும் போகலாம்
உனக்கானது அது என்பதிலேயே
எழுதாமல் விட்டதையும் வாசித்துக் கொள்வாய்
பொறு
எழுதப் பசித்திருக்கும் விரல்கள்
எங்கோ
யுகங்களாய்
உன் முகவரியைத் தேடி
அலைந்த வண்ணமாய் இருக்கின்றன தாம்..
..ஷஹி..
பெறுநர் நீ என்ற அடையாளத்துடனான
ஒரு கடிதத்தின் வருகைக்காக
யுகங்களாகக் காத்து கொண்டிருக்கிறாய்
நீ சமைத்த உணவின்
ருசியேறின விரல்களினால்,
உன் அழகைப் பற்றின வர்ணனைகள் கொண்டதாய் ,
உலகிலேயே சிறந்த
உன் புன்னகையின் வெளிச்சக் குறிப்புடன்
நீ வளர்க்கும் மலர்கள் தாம்
எப்போதும் பிரகாசிக்கின்றன என்றும்
உன்னிலிருந்து வீசும் நறுமணம்
காற்றில் ஏறி அலைவதாகவும்
நல்லுணர்வுகள் தாங்கியதாகவும்
உன் பதில் கடிதம் கொணரவிருக்கும்
ஏக்கத்தவிப்பின் அங்கலாய்ப்புகள் தூவினதாகவும்
அது இருக்கலாம்
அல்லது
இவற்றில் எதையுமே அது பேசாமலும் போகலாம்
உனக்கானது அது என்பதிலேயே
எழுதாமல் விட்டதையும் வாசித்துக் கொள்வாய்
பொறு
எழுதப் பசித்திருக்கும் விரல்கள்
எங்கோ
யுகங்களாய்
உன் முகவரியைத் தேடி
அலைந்த வண்ணமாய் இருக்கின்றன தாம்..
..ஷஹி..
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதையை வாசிக்கிறேன் . அருமை . உங்கள் ப்ளாக்கிலும் இந்த மாதம் நிறைய பதிவுகள் பார்த்ததில் மகிழ்ச்சி ...
ReplyDeleteஅன்புடன் அனந்து ...