
அகழிகள் வெட்டச் சொன்னாய்...
செய்தேன்...
சுற்றிலும் கோட்டைகள் வேண்டுமென்றாய்..
ஆணைப்படியே....
உள்ளிருந்து ஒசியும் புரிதல் புன்னகையை,
எப்படியாம் மறைப்பது?
திகிலூட்டும் உன் ஒதுக்கம் தெறிக்கும் குரல்..
பெருவெளியெங்கும் வியாபிக்கும் நிராகரிப்பு குறித்தான அச்சம்.....
நரம்புகளில் நடுக்கம் கொடுக்கும் ஏக்கத்தின் தெறிப்பு..
திடுக்கங்கலோடான மூச்சின் வெடிப்பு....
விழிகளின் வழி..புறவுலகு காண ,வென்னீராய்ப் பெருகும் நினைவுகள்,
நகக்கணுக்களிலும் நீங்காதிருக்கும் உன் மென் நடையின் மீதான தாகம்,
நாசி நுனியின் துடிப்பில் மறைக்க எத்தனிக்கும் மோக நெடி,
உதடுகளில் விரவி எரிக்கும் தினவு..
அவலாசைகளின் மிகு உருவாய் நானே.......