Search This Blog

Wednesday, June 30, 2010

ஆணைப்படி!!!


கிளியொன்று பாலிக்கின்றாய்...
பழக்கியுள்ளாய் அதனை நீ பேச..
கொஞ்சும் அதன் மொழியால்,
கோபம் மறப்பாய்!
அழகு செய்கின்றது அது, உன்னில்லம்!
பசிக்குமுன் பால்,பழம் தருவாய்,
பார்வையை அது திருப்பினாலும் ...
பொறுக்காதுனக்கு!
பக்குவங்கள் பல செய்வாய்...
பிடிக்குமே அதை!
ஆடுவதற்கோர் ஊஞ்சல்..
ஆசை வார்த்தைகளால் கொஞ்சல்...
சிறப்பானது அது என்பதால்..
சிறகுகள் வெட்டப்படவில்லை!
சுதந்திரமாய்த் திரியலாம் அது...
எத்தனை வேண்டுமானாலும் ...
தன் கூண்டுக்குள்ளேயே!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails