Search This Blog

Tuesday, June 29, 2010

என் சீனக் கண்ணழகி ஆஷி...


கூர் மூக்கு இல்லை தான் அவளுக்கு!
தன் சின்னஞ்சிறு சீனக்கண்களால்...
கதைகள் நூறு கூறுவாள்..
சாமுத்திரிகா லட்சணமா?பேசப்படாது!
பாசக்காரி அவள்! போதாதா?
சற்றே மறை கழண்டார் போல்...
சிற்சமயம் மிழற்றுவாள்..
அடுத்தவர் துன்பம் தாங்காள்..
அன்பொன்றே அறிவாள்.
தொல்லைகள் பல புரிவாள்...
தொந்தரவுத் திலகம் அவள்!
ஆனால்.....
துணையாய் அவள் இருந்தால்...
துயர் துரத்தாது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails