
கடலோரம் வசித்தவரை,
மீனுக்கில்லை கவலை...
நகருக்குள் வந்தவுடன்...
சோறே இறங்கவில்லை!
வஞ்சிரங் குழம்பென்றால்...
சொத்தெழுதித்தரலாம்..
வஞ்சிரம் கிடைக்காவிட்டால்,
விராலும் தேவலாம்!
விராலும் இல்லையென்றால்..இறால்!
கெண்டை இல்லாவிட்டால்,கெளுத்தி!
ஆனால்.......
எல்லை தாண்டி கொல்லப்பட்ட மீனவனின் பிள்ளை,
செல்லப்பன் இல்லையென்றால்..சண்முகத்தின் அப்பன்,
கன்னியப்பன் செத்துவிட்டால்..ஆறுமுகன் அப்பன்,
என்று... மீன் வகை மாற்றுவது போல்...
தேற்ற இயலுமா மனதை?
பெருந்தலைகளைச் சொல்லி ஆவதென்ன பிழை?
சட்டை கசங்காமல் வேலை,
தேதி ஒன்றானால்...காசோலை!
தட்டில் தடையில்லாமல் விழும் மீன் தலை!
இயற்கை எய்திவிட்டால் நடுரோட்டில் சிலை...
எவன் அப்பன் செத்தால்...யாருக்கென்ன கவலை!
super !
ReplyDeleteமனதைத் தொட்டது கவிதை வரிகளின் நயம்.
ReplyDeleteதொடரட்டும் கவிதைப் பயணம்.
நன்றி மாமா...
ReplyDeletesamuga akarei vulla kavithei.kavithei kalam arumei.ethartha varigalil sogam matrum cobam therikirathu.innum azham sendrirukalamo?
ReplyDeletemeenavargalin sogam kanmunnay theyrigirathu
ReplyDelete