
ஒரு வேளை யுத்தம் நிஜமாக நின்று போனால்...
அதன் பின்னே தனி ஈழம் அரிதாக சாத்தியமானால்..
அவ்வேளை ஆவியோடு அயராமல் நானிருந்தால்,
கால் பதிப்பேன் நான்,
என் உயிர் பதிந்த பூமியிலே!
என் கரங்களால் நான் நட்ட மாஞ்செடியும் மாண்டிருக்கும்,
பிஞ்சுகளோடு நான் விட்டு வந்த கொய்யாவும் வீழ்ந்திருக்கும்...
அதில் கூடு கட்டிக் குடியிருந்த கிளி ஜோடியெங்கு போயிருக்கும்?
என் ஜோடியென நான் வரித்திருந்த கல்யாணிக்கென்ன நேர்ந்திருக்கும்?
பதுங்கு குழி தேடி உயிர் விட்ட தங்கையின்...
கல்லறையா பிழைத்திருக்கும்?
கால் ஒடிந்ததால் கைவிடப்பட்ட தாத்தா எங்கு அடங்கியிருப்பார்?
காணச் சலியாத எங்கள் பண்ணை வீட்டில் இன்று
யார் குடியிருப்பார்?
இறந்து போன நம்பிக்கையை எம்மக்கள் உள்ளங்களில்
யார் விதைத்திடுவார்?
அச்சம் என்பது மடமை என்று எம் பொடியர்களுக்கார்
கதைத்திடுவார்?
நடக்குமா?ஈழம் கிடைக்குமா?
அருமை!
ReplyDeleteநன்றி...
ReplyDelete