Search This Blog

Saturday, July 3, 2010

வா.......


வா.....
முகில்களில் மிதக்கலாம்..
அலைகளில் அலையலாம்,
கண்கள் மூடிக் கனவினில் கிடக்கலாம்,
கதைகள் பேசிக் காற்றினில் கரையலாம்
நீரில் அமிழ்ந்து நினைவகற்றி இருக்கலாம்...
வா.....
எந்த மலரில் வாசம் அதிகம்,
முகர்ந்து நுகர்ந்து மெச்சலாம்..
சின்னச் சின்ன சல்லாபச் சண்டைகள்..
செல்லமாய் நாம் போடலாம்,
பசித்து ருசித்து இன்றொரு நாளில்,
பழைய சோறு உண்ணலாம்,
வா....
வார விடுமுறை வந்து விட்டது,
வாழ்ந்து இன்றொரு நாளில் பார்க்கலாம் ...

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails